Monday, May 28, 2012

Swarna Akarshana Bairavar


Ashtami and Pournami Thithis are considered very auspicious for Lord Bairavar. It is believed that one who worships this Bairavar on Ashtami Thithi will be freed from all debts and loans. It is also believed that property disputes will be solved by worshipping this Bairavar.

Among all Bairavars the worship of Swarna Akarshana Bairavar is considered very superior. This Bairavar is seen in a seated posture with Amudha Kalash in one hand and Sulam in another hand. Goddess Bairavi is seated on the lap of Lord Bairavar. Seeing Lord Bairavar with his consort is very rare. There are very few temples that have a seperate sannadhi for Swarna Akarshana Bairavar. One is near Chidambaram Natarajar temple and another one is in the outskirts of Chennai near Vannagaram within the temple of Machakara Balamurugan Temple.

Wednesday, December 14, 2011

கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம்

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிக நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்-
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன்ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளைவிடைமேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
திருமகள், கலைஅது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம்ஆன பலவும்,
அரு நெதி நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு, வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
கொதிஉறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடுநோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள்- வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து-என்
உளமே புகுந்தஅதனால்-
வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும்,
மிகைஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரிஅதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள்தனோடும் உடன்ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்-
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்லநல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
வெப்பொடு, குளிரும், வாதம், மிகைஆன பித்தும்,
வினைஆன, வந்து நலியா;
அப்படி நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

வேள் பட வழிசெய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள்தனோடும் உடன்ஆய்,
வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்-
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்
தனோடும்
இடர்ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்லநல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

பலபல வேடம் ஆகும் பரன், நாரிபாகன்,
பசு ஏறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம்ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம்ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்-
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

தேன் அமர் பொழில் கொள் ஆலை
விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.



எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா

நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க....

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க  இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும்  பிராண சக்தியை  உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.
ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை  இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக்  குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,
அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது
இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே  ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு  அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
 ஒரு ஜவ்வு இதயத்தின் Shock  absorber   இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது  விழித்திருந்தால்
 பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது
கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை  கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.


ஹோரை அட்டவணை :


ஹோரை பார்த்து நீங்க செய்ற எல்லாவேலையும் - சும்மா நச்சு நச்சுன்னு முடிக்கலாம்....

ஹோரை அட்டவணை :


மணி-முதல்  
ஞாயிறு  
திங்கள்  
செவ்வாய்  
புதன்  
வியாழன்  
வெள்ளி  
சனி  
  6.00 - 7.00
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
     குரு  
 சுக்ரன் 
சனி  
  7.00 - 8.00
 சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
  8.00 - 9.00
 புதன் 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
  9.00 -10.00
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
10.00 -11.00 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
11.00 -12.00 
குரு  
 சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
12.00 -01.00
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
01.00 -02.00 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
02.00- 03.00 
சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
 குரு 
03.00-04.00 
புதன்  
 குரு 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
04.00-05.00 
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
05.00-06.00
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
06.00 -07.00
குரு 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
07.00 -08.00
செவ்வாய் 
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
08.00 -09.00
சூரியன் 
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
09.00 -10.00
சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
10.00 -11.00 
புதன் 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
11.00 -12.00 
சந்திரன் 
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
12.00 -01.00
சனி 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
01.00 -02.00 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
02.00- 03.00 
செவ்வாய் 
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
 03.00-04.00 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
 04.00-05.00 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
 05.00-06.00
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  


Read more: http://www.livingextra.com/2011_12_01_archive.html#ixzz1gXulpTgU